நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்ய வேண்டும் என்ற தேவை கட்சிக்கு இருந்த போதிலும், இது தொடர்பில் ஜனாதிபதி இதுவரையில் எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் தனித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாயின் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானதாக அமையும்.
இருப்பினும், மஹிந்த தரப்பினரும் ஸ்ரீ ல.சு.க. தரப்பினரும் இணைந்து ஒரு வேட்பாளரை நியமிப்பதாயின் இரு தரப்பும் பாரிய விட்டுக் கொடுப்பொன்றை செய்தே ஆக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ ல.சு.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

