1987-ல் இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்டாகச் சேர்ந்த சுரேஷ் சலே, மேஜர் ஜெனரலாக ஓய்வு பெற்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
எனினும் , கடந்த தேர்தலில் சுரேஷ் சலே செய்த ஒரு பெரிய தவறு, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் ஏறாததுதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
திசைகாட்டி மேடையில் ஏறியிருந்தால், சலே தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக இருந்திருப்பார்
நல்லாட்சி காலத்தில் ரணிலின் அடியாட்கள்
என்றும், ரவி செனவிரத்னவும் ஷானி அபேசேகரவும் சலே செய்த அதே தவறைச் செய்யாமல் திசைகாட்டி மேடையில் ஏறியிருந்தனர் எனவும் சமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.

முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவின் அடியாட்களாக இருந்த ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர மற்றும் ஆனந்த விஜேபால ஆகியோர் இந்த வழியில் தனிநபர்களை வேட்டையாடினர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.












