ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய கலந்துரையாடலின்போது நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.