அமெரிக்கா-வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் வான்பரப்பில் பறக்கும் விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-வடகொரியா இடையேயான அணு ஆயுத மோதல் போக்கு முடிவிற்கு வந்துள்ளது.
இதனையடுத்து இருநாடுகளும் சமரசமாகச் செல்ல முடிவெடுத்துள்ளனர். சீனா, தென் கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் அமெரிக்கா-வடகொரியா இடையே சமரசம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் ஜூன் 12ம் தேதி உலகமே உற்றுநோக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம் ஜாங் சந்திப்பு நடைபெறுகிறது. சிங்கப்பூர் செந்தோசா பகுதியில் நடைபெறும் இந்த சந்திப்பை முன்னிட்டு வரும் ஜூன் 11,12,13 தேதிகளில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வான்பரப்பில் தங்களது வேகத்தை குறைத்தல், ஒடுதளத்தை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.