இந்நாட்டிற்கு வந்துள்ள சவுதி அரேபிய நாட்டவர்களை வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதுவர் காரியாலயம் டுவிட்டர் செய்தியின் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக சவுதி நாட்டு தொலைக்காட்சி சேவையொன்று அறிவித்தல் விடுத்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவ்வறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளதாக சகோதர தேசிய நாளிதழொன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் நாட்டில் தேசிய தவ்ஹீத் பயங்கரவாதிகளினால் மீண்டும் தாக்குதல் நடாத்தப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக அமெரிக்க தூதுவர் ரொய்ட்டர் சேவைக்கு வழங்கியுள்ள தகவலையடுத்து, இந்த அறிவிப்பை சவுதி தூதரகம் விடுத்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.