ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டே மாநகர சபை உறுப்பினர் மெஹ்டீன் அலி உஷ்மான் வாள் உள்ளிட்ட சில சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவருடன் அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்போது அவர்களிடமிருந்து வாள்கள் உள்ளிட்ட மேலும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, ஏற்கனவே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் இரு அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பிரதி மேயரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் உள்ளடங்குகின்றனர்.