அண்மைக்காலங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும், அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நிமித்தம், கொழும்பில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட தரிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.