முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
நேற்று உழவு இயந்திரத்தின் ஊடாக வயல் உழுது கொண்டிருந்தபோது, குளவி கலைந்து தாக்கியதில் சிறுமி உள்ளிட்ட 7 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதில் ஐந்து பேர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையிலும் இருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் சுதந்திரபுரம் பகுதியில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.