Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றவாளிக்கு இராஜதந்திர பதவியை வழங்கிய கோத்தபாய? சிக்கியது புதிய ஆதாரம்

April 23, 2017
in News
0

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராஜதந்திர பதவி வழங்கியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலையுடன் ராஜபக்சவினருக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் எந்தவிதமான தொடரும் தமக்குக் கிடையாது என ராஜபக்ச குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்தே மறுத்துவருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின்படி, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தாய்லாந்துக்கான இலங்கை தூதரகத்தின் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமைக்கான புதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

பிரதான சந்தேகநபராக கருதப்படுகின்ற இராணுவ புலனாய்வு அதிகாரியான மேஜர் பண்டார புலத்வத்தவிற்கு, தாய்லாந்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் புலனாய்வு அதிகாரி மாத்திரமன்றி, இரண்டாம் செயலாளர் பதவியும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி இலங்கையில் இருந்த போது, வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

கோத்தபாய அனுப்பிய அக்கடிதத்தில், குறித்த நபருக்கு பதவியினை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேஜர் பண்டார புலத்வத்தவிற்கு பதவி வழங்குவதற்காக அவருடைய சுயவிபர கோவையை கூட பெற்றுக் கொள்ளவில்லை. அதற்கான சரியான ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக அந்த ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி வழங்கப்பட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரால் விசா நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு மேஜர் பண்டார புலத்வத்தஅங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அந்த பதவி ரத்து செய்யப்பட்டதாகவும், குறித்த ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

கிளிநொச்சியில் முன்பள்ளிகளும் இராணுவமயம்

Next Post

முடிந்தது விசாரணை! டிடிவி தினகரனுக்கு டெல்லி பொலிஸ் அதிரடி உத்தரவு

Next Post
முடிந்தது விசாரணை! டிடிவி தினகரனுக்கு டெல்லி பொலிஸ் அதிரடி உத்தரவு

முடிந்தது விசாரணை! டிடிவி தினகரனுக்கு டெல்லி பொலிஸ் அதிரடி உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures