மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை 3 ஆண்டாக காக்கை கூட்டம் துரத்தி வருவதால், அவர் கையில் குச்சியுடன் அலைகிறார். மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத் என்பவர், கடந்த 3 ஆண்டுகளாக காக்கைகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார். வெளியூருக்கு எங்காவது செல்ல வேண்டுமானால், கையில் குச்சியுடன் செல்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வலையில் சிக்கிய காக்கை குஞ்சு ஒன்றை, சிவா காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது, காக்கை கூட்டம் அவரை சுற்றி வட்டமிட்டு இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக சிவா கையில் இருக்கும்போதே காக்கை குஞ்சு இறந்துவிட்டது.
அதிர்ச்சியடைந்த காக்கை கூட்டம், அன்றைய தினத்தில் இருந்து சிவாவை துரத்தி வருகின்றன. ‘குஞ்சின் இறப்புக்கு காரணம் சிவாதான்’ என்று நினைத்து அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தி வருகின்றன. சில நேரங்களில் அவரது தலையை தட்டி கூட்டமாக தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதல், கடந்த 3 வருடங்களாக தொடர்வது தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. என்ன செய்வதென்ேற தெரியாமல், கையில் குச்சியுடன் அலைகிறார் சிவா.
இதுகுறித்து, சிவா கேவத் கூறுைகயில், ‘‘நான்தான் குஞ்சு காக்காவை கொன்றுவிட்டதாக மற்ற காக்கைகள் நினைத்துவிட்டன. ஆனால், வலையில் சிக்கிய குஞ்சு காக்கையை நான் காப்பாற்றவே நினைத்தேன். இப்போது என்ன செய்வதென்ேற தெரியவில்லை. கால்நடை மருத்துவர்களிடம் கேட்டால், ‘காக்கைக்கு அறிவுத்திறன் அதிகம்; அதனிடம் தவறாக நடந்து கொண்டால், இப்படிதான் செய்யும்’ என்று சாதாரணமாக சொல்வதாக தெரிவித்தார். காக்கை கூட்டத்தால், சிவாவுக்கு ஏற்பட்டுள்ள சோகம், அப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்காகிவிட்டது. அவர் வெளியே வந்தாலே காக்கைகள் அவரை வட்டமிடத் தொடங்குவதால், சிறுவர்கள் கூட்டமும் அவரை பின்தொடர்ந்து செல்கிறது