கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று காரணமாக மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முகமாலை இந்திரபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின்னர் மீள்குடியேரிய மக்கள் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்
இந்நிலையில், குறித்த பகுதியில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்கு வசிக்கும் மக்கள் குடியிருந்த தற்காலிக வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அத்துடன் அவர்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தாம் இங்கு மீள்குடியேரியபோது, தரப்பால்கள் வழங்கப்பட்டதாகவும் எனினும் அவை தற்போது பழுதடைந்துவிட்டதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.