திருகோணமலை கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையில் இன்று (25) கிண்ணியா நகரசபையினர் ஈடுபட்டுள்ளனர்.
பல வருடகாலமாக கிண்ணியா பாலம் இருளில் மூழ்கிய நிலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இதனை அடுத்து நகர திட்டமிடல் அமைச்சின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா பாலத்தை ஒளிமயமாக மாற்றும் நடவடிக்கையில் கிண்ணியா நகரசபை ஈடுபட்டுள்ளது.

