காலி கடற்கரையில் ஒருவகை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அடையாளம் காணமுடியாக பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த நிலையில் மீனவர்களால் கைப்பற்றப்பட்டது.
நேற்று மாலை இந்த பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 அடி நீளமாக காணப்படுகின்ற இந்தப் பொருளின் ஏனைய பாகங்கள் கடலுக்குள் மூழ்கியிருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இது விமானமொன்றின் பாகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.