பாடசாலைக்கு சென்ற மாணவ, மாணவிகளை கறுப்பு ஆடைகளுடன் வந்த சில மர்ம நபர்கள் கத்திகளை காட்டி வழி மறித்துள்ளனர்.
அச்சமடைந்த 11 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், நேற்று (புதன்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
கறுப்பு ஆடைகளுடன் கத்தியைக் காட்டி மாணவ, மாணவிகளை மிரட்டியதால் மயங்கமுற்ற 11 மாணவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தினால் 8 மாணவிகளும், 3 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.