அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த டாக்டரை, அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
யோகா நிபுணர்:
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அச்சுதா ரெட்டி. அமெரிக்காவில் மன நல டாக்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி பீனா ரெட்டியும் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1986 ல் ஒஸ்மானியா மருத்துவ கலையில் பட்டம் பெற்றார். தொடர்ந்து கன்சாஸ் பல்கலையில் மனநலம் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர் கான்சாஸ் நகரில் உள்ள கிழக்கு விசிடா நகரில் கிளினிக் நடத்தி வந்தார். பல மருத்துவமனைகளுக்கும் சென்று ஆலோசனை கூறும் அவர், யோகா மற்றும் உடல் தகுதி நிபுணராகவும் இருந்துள்ளார்.
கைது:
இந்நிலையில், கடந்த புதன்கிழமை(செப்.,13) அச்சுதா ரெட்டி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக உமர் ரஷீத் தத் என்பவரை கைது செய்துள்ளோம். டாக்டரிடம் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து உமர் அடித்து கொலை செய்தார். அவர் தப்பி செல்ல முயன்ற போதும், விரட்டி விரட்டி அடித்துள்ளார். இதில், டாக்டர் உடலில் காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய உமர், கிளப் ஒன்றிற்கு சென்றார். அங்கிருந்த ஊழியர் ஒருவர், உடையில் ரத்தக்கறையுடன் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்று அவரை கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.