பூமராங் படத்தை தொடர்ந்து இயக்குநர் கண்ணன் – அதர்வா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்தப்படியாக சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் கண்ணன். காமெடி கலந்த ஆக்ஷ்ன் கதையில் உருவாகும் இப்படத்தை கண்ணன், தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. முன்னணி தெலுங்கு நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. டிசம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கண்ணன் இயக்கிய, “ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை மற்றும் சேட்டை” படங்களில் சந்தானம் காமெடி ரோல்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.