முஸ்லிம்களுக்குள் ஒழிந்திருந்த சிறிய பயங்கரவாதக் குழுவால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இன்று நாட்டில் முழு முஸ்லிம் சமூகத்தினரையும் குற்றவாளிகளாகப் பார்க்கின்றனர். ஆகவே, அந்தத் தீவிரவாதக் குழுவை அடியோடு அழிக்க வேண்டும். நமது சமூகங்களை பிளவுப்படுத்துவதே அந்தத் தீவிரவாதக் குழுக்களின் நோக்கமாக இருந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.