Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு.

March 13, 2017
in News
0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பொதுச்சபைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

என்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் அமைப்புகள், சங்கங்கள், கோயில்கள், சிவில் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தமிழ் கல்வி நிறுவனங்கள் என 250 க்கும் மேலதிகமான பன்னாட்டு தமிழ் அமைப்புகள் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

கடந்த 06 ஆம் திகதி ஜெனிவாவில் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில் கையளித்துள்ளதுடன் ஏனைய

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளை நோக்கிய செயற்பாடுகளையும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சக தமிழ்த் தேசியத்தை நோக்கிய தமிழ் அமைப்புகள் முன்னெடுத்துவருகின்றனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல்,

அங்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தாமல், இவ் விடயம் சார்ந்த முக்கிய சர்வதேச உதவிகளை நிராகரிக்கும் வகையில் தனது நிலப்பாட்டை கொண்டுள்ளது.

ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் எனும் வேடம் தரித்தபடி சர்வதேசத்தை ஏமாற்றி வருகின்றது. மறுபுறம் தமிழர் தாயகத்தில் பல்வேறு மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது எனும் கருத்துக்கு அமைய இனிமேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஸ்ரீலங்காவுக்கு கால நீடிப்பு கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவுக்கு ஆதரவான எவ்வித தீர்மானத்தையும், அத்தோடு கூடிய கால நீடிப்பையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் மற்றும் அங்கத்துவ நாடுகளும் வெற்றுவாக்குறுதிகளை நம்பி ஆதரிக்க கூடாது என்பதும் நாம் வேண்டுகின்றோம்.

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட அனைவரும் இதனை உறுதிப்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா தொடர்பான விடயம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருக்கும் சமநேரத்தில் இவ் விடயம் ஐ.நா பொதுச்சபைக்கு கொண்டுசெல்லப்பட்டு,

அதன் ஊடாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு இலங்கைத் தீவில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு படைகளால் முன்னெடுக்கப்படும் ´மனிதவுரிமை மீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் பொருட்டு தமிழர் தாயகத்தில் ஐ.நா வின் கண்காணிப்பு பணியகம் நிறுவப்படவேண்டும் என்றும் இம் மனுவில் வேண்டப்பட்டுள்ளது.

மேலும்,ஸ்ரீலங்காவுக்கு காலநீடிப்பு கொடுக்க வேண்டும் என்பதில் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் புலத்தில் “உலகத் தமிழர் பேரவையும்” எடுக்கும் முயற்சி தமிழ்த் தேசியத்தையும்,

நீதிக்காக போராடும் மக்களின் உணர்வுகளையும், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பரிகார நீதியையும் அடியோடு அழிக்கும் செயலாகவே அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கருதுவதுடன் அதற்கான கண்டனத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

b bbbb bbbbb

 

 

Tags: Featured
Previous Post

ஸ்காபுரோ பகுதி பெற்றோர்களிற்கு பொலிசார் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை?

Next Post

இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம்! அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு.

Next Post
இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம்! அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு.

இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம்! அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures