வழக்கு எண், மனம் கொத்தி பறவை, தனிஒருவன் போன்ற பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கோபிகிருஷ்ணா. இவருக்கும் வேதாரண்யத்தை சேர்ந்த வந்தனா என்ற பெண்ணுக்கும் நேற்று(ஜூன்), வேதாரண்யம், ஆயக்காரன்புலம்பில் திருமணம் நடந்தது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணமாகும்.
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இயக்குநர்கள் எழில், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.