இலங்கை இராணுவத்திலுள்ள கேர்னல் பதவியிலுள்ள 31 படை வீரர்கள் பிரிகேடியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத் தளபதியின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதியினால் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.