நடிகை ஓவியா, நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என சொல்லி, இருவருமே தங்களுடைய காதலை மறுத்து வருகின்றனர். இருந்தாலும், ஒரு காதலன் – காதலி, எப்படி நெருக்கமாக இருப்பார்களோ, அப்படி பொது இடங்களிலும் கூட இருவரும் நெருக்கமாக இருந்து காட்சியளிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை ஓவியா தனது 29வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அதில் ஆரவ்வும் கலந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர். கேக்கை இருவரும் ஒருவருக்கு மற்றொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் சேட் செய்யத் துவங்கினார் ஓவியா. Ask oviya என்ற ஹேஸ்டாக் மூலம் அவர் ரசிகர்களுடன் சேட் செய்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வரிசையாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார் ஓவியா.
அப்போது ஒரு குறும்புக்கார ரசிகர், அயிட்டம், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன செய்யப் போற? அப்படின்னு கேட்டு விட்டார். ஆபசமா கேள்வி கேட்டதும், ஓவியாவுக்கு கோபம் வந்து விட்டது. உங்கம்மாதான் அயிட்டம் என்று பதில் சொல்லி விட்டார்.