Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தின் செயல் வெட்ககேடு-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

December 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் | சந்திரிகா

மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு, குடித்து திருப்தியாக மக்கள் வாழ்ந்த நாட்டை வங்குரோத்து அடைந்த நாடு என தற்போதைய அரசாங்கமே அறிவித்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் வந்துராகலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வீட்டில் நடந்த மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

33 வீதமான குடும்பங்கள் ஒரு வேளை சாப்பிடும் நிலைமை

அரசாங்கத்தின் செயல் வெட்ககேடு-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா | Govt S Action Is Disgraceful Former President

இலங்கை தற்போது கடனை செலுத்த முடியாத நாடு என அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. இது வெட்ககேடு. 33 வீதமான குடும்பங்கள் ஒரு வேளை சாப்பிடும் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

5 வயதுக்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளின் பெரும்பாலானோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அரசாங்கமே நாடு வங்குரோத்து அடைந்து விட்டதாக அறிவித்தது.

எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் 2 ஆயிரத்து 300 ஆண்டு வரலாற்றுக்கு உரிமை கோரும் கௌரவமான நாடு. மக்கள் மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு, குடித்து வாழ்ந்த நாடு. உலகம் ஆச்சரியப்படும் குளங்களை கொண்ட கட்டமைப்பு எமக்கு இருந்தது.

உலகம் அங்கீகரித்த வீடமைப்பு கலை எமக்கு இருந்தது. இவை எப்படி எமது நாட்டுக்கு கிடைத்தன என்று உலகமே ஆச்சரியப்பட்டது. அப்படியான நாட்டில் தற்போது ஒரு நாளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இப்படியான பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும். அப்படியான அரசாங்கம் தற்போது இருக்கின்றதா?. அப்படியான தலைமைத்துவம் இருக்கின்றதா?.

இதுவரை இரண்டு கட்சிகளே நாட்டை ஆட்சி செய்தன. ஏழு, எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் கட்சிகளும் உள்ளன. மக்கள் விடுதலை முன்னணி தற்போது முன்நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றது.

மகிந்தவின் கனவு

அரசாங்கத்தின் செயல் வெட்ககேடு-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா | Govt S Action Is Disgraceful Former President

ஏனைய கட்சிகள் முடிந்து விட்டன. நாட்டின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுப்பட்டு விட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் இல்லாதொழித்து விட்டனர். இது குறித்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன்.

தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு அணிகளாக பிளவுப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பலரை மொட்டுக்கட்சிக்கு அழைத்துச் சென்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்து அவர்களின் கொள்கைக்குமைய கட்சியை உருவாக்கும் கனவு மகிந்த ராஜபக்சவுக்கு இருந்தது. மகிந்த ராஜபக்சவினருக்கு பண்டாரநாயக்கவின் கொள்கைகள் எப்போதும் ஒத்து வராது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் கொள்ளையடிப்பவர்கள் இருக்கவில்லை. அந்த கட்சியை சிலர் அழித்து விட்டனர் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வீட்டிற்கு செல்லப் போகும் சுமார் 25,000 அரச ஊழியர்கள்! 34,000 பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு

Next Post

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

Next Post
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures