அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக ஜி-7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள 22 மில்லியன் டொலர் நிதியை ஏற்க தயாராகயிருப்பதாக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
அமேசன் தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது என்றும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளதாக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே அமேசான் தீயை அணைக்க ஜி-7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்றுக் கொள்ள முடியும் என்று பிரேசில் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமேசன் காட்டுத் தீ மிகவேகமாக பரவிவருகின்ற நிலையில், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தீயை அணைப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜி-7 நாடுகள் அறிவித்தன. ஆனால், இந்த நிதியை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று பிரேசில் அரசு தெரிவித்திருந்தது. எனினும் இந்த நிதியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக சில நிபந்தனைகள் விதிப்பதாக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.