ஈராக்கில் காணப்படும் அமெரிக்க படைத்தளம் மீதான தாக்குதல் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொலைக்குப் பதிலடியாக இன்று (08) அதிகாலை ஈரான் இராணுவம் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக்கில் காணப்படும் அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவிய 15 ஏவுகணைகளில் குறைந்தது 80 அமெரிக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறியுள்ளன.
இந்த தாக்குதலில் ஃபத்தே -110 எனும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை 186 மைல் அல்லது 300 கி.மீ. சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு ‘தியாகி சுலைமானி ‘ என்று பெயரிடப்பட்டு உள்ளதாகவும் ஈரான் அரச தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.