க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு 2020 இல் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரிவெனாக்களின் பீடாதிபதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.
கடந்த காலங்களில் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதனால், உரிய நேரத்துக்கு விநியோகிப்பதில் பல்வேறு சிரமங்களை முகம்கொடுக்க வேண்டிய ஏற்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.