நடிகர் அஜித், வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர் கொண்ட பார்வை படம், நேற்று வெளியாகினது. இந்நிலையில், அஜித் ரசிகரான மெட்ரோ, ரங்குஸ்கி படங்களில் கதாநாயகனாக நடித்த சிரிஷ் சரவணன், நேர் கொண்ட பார்வை படத்தை காண வேண்டும்; அதற்காக எனக்கு விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு, தனது தயாரிப்பாளரிடம் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
டுவிட்டரில் சிரிஷ் சரவணன் கூறியிருப்பதாவது: சார் எனக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேர் கொண்ட பார்வை படம் வெளியாகிறது. அதைப் பார்த்தால் தான் எனக்கு காய்ச்சல் சீராகும். அதனால், எனக்கு ஒரு நாள், விடுமுறை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.