“எப்போதெல்லாம் குற்றமோ ஊழலோ நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அரசாங்கம் ஒருபோதும் குற்றம் செய்யாதது போல் நடந்துகொள்கிறது,” என்று எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க (SJP) நாடாளுமன்றத்தில் கூறினார்.
“ஓட்டுநர் பயிற்சி பெறும் எவரும் ‘L’ பலகை பொருத்தப்பட்ட வாகனத்தையே ஓட்ட வேண்டும். இந்த அரசாங்கம் இப்போது ஒன்றரை ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பார்க்கும்போது, இந்த அரசாங்கம் ஒரு ‘L’ பலகை அரசாங்கத்தைப் போலவே செயல்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
உகண்டாவிலுள்ள டொலரை கொண்டு வருவதாக கூறினீர்கள்
திறைசேரிக்கு வரும் ஒவ்வொரு காசையும் பொதுச் சொத்தைப் போலப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். அதை பொதுச் சொத்தைப் போலப் பாதுகாத்த போதிலும், இப்போது மக்களின் வரிப்பணத்தில் ஒரு காசைக் கூடப் பாதுகாக்க முடியவில்லை.

உகாண்டாவிலுள்ள டொலர்களை எப்படி கொண்டு வருவது என்று சிந்தித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் உங்களால் திறைசேரியில் உள்ள டொலர்களைப் பாதுகாக்க முடியவில்லை.
இத்தகைய ஒரு ‘L’ பலகை அரசாங்கத்திடம் இருந்து இதைவிட அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது,” என்று கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.
