கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் பிரதமரின் பாதுகாவலராக நடிக்கிறார் சூர்யா.
இந்த படத்தின் கதை உருவானது பற்றி கே.வி.ஆனந்த் கூறுகையில், பாதுகாவலர்கள் பற்றிய நிறைய கதைகளை படிப்பேன். அப்படி ஒரு கதையை படித்துக் கொண்டிருந்த போது தான் ஏன் பாதுகாவலர்களைப் பற்றியே ஒரு கதை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதன் பிறகு தான் பிரதமரை படுகொலை செய்ய சிலர் சதி திட்டம் தீட்ட, அவரது பாதுகாவலர்களில் ஒருவர் அந்த சதியை முறியடித்து எப்படி பிரதமரை பாதுகாக்கிறார் என்று ஒரு கதையை உருவாக்கினோம்.
இந்த கதையில் பிரதமராக மோகன்லாலும், அவரை பாதுகாக்கும் காவலராக சூர்யாவும் மிகச்சிறப்பாக போட்டிபோட்டு நடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்.