கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் தனது காணிக்கு நீதியான தீர்வை வழங்கி காணி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு பிரதேச செயலகம் , மாவட்டச் செயலகம் உட்பட ஆளுநர் செயலகம் வரையில் சத்தியாக் கிரமாக போராடி நீதி கேட்டவர் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்த நிலையில் மரண நிகழ்விற்குகூட போதிய இடம் இன்றியே உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஆனந்தபுரத்தில் இரு பிள்ளைகளுடன் வாழும் நிலையில் தனது காணியை அடாத்தாக வேறு ஒருவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய நிலையில் அதனை தனக்கே மீளப்பெற்றுத் தருமாறு கடந்த 9 ஆண்டுகளாக போராடி வந்தார்.
இவ்வாறு போராடிய காலத்தில் சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டிருந்தார். இறுதியில் கடந்த மாதம் ஆளுநர் செயலகத்தையும் நாடியபோதும் இன்றுவரை தீர்வு கிட்டாத ஏக்கத்தில் ஊணகங்களையும் நாடி நின்றவேளையில் தற்போது திடீரென மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த நிலையில் இருப்பிடம் இன்றி குடும்பம் தவிக்கின்ற நிலமை அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

