யாழ்ப்பாணம், அரியாலையில் வெற்றுக் காணி ஒன்றில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரியா அரியாலையில் உள்ள சர்வோதயத்துக்கு முன்பாக உள்ள காணியிலேயே அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தக் காணியைத் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்போது இரு பெட்டிகள் தென்பட்டுள்ளன. அவற்றில் துப்பாக்கி ரவைகள், மகசின், மிதிவெடிகள் என்பன இருந்துள்ளன.
அதையத்து இது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதுடன், அங்கு பாதுகாப்பை ஏற்படுத்தினர்.
துப்புரவுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், சிறப்பு அதிரடிப் படையினர் வெடிபொருள்களை அகற்றி பின்னர் துப்புரவுப் பணிகளைத் தொடருமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

