வவுனியாவில் இரவு பயணங்களின் போது வீதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சாரதிகளும், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் செல்லும் வீதிகளில், வீதியின் நடுவே நடமாடும் யானைகளால் வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் பதற்ற நிலைக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக இரவு வேளைகளில் பயணம் செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், இரவில் பயணம் செய்ய முடியாதநிலை காணப்படுவதாக பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் அண்மைக் காலங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், யானைகள் வேறு பகுதியிலிருந்து குறித்த பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் யானைகளின் நடமாட்டத்தைக் குறைத்து, பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வேண்டும் என வாகனச்சாரதிகள் மற்றும் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

