Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடைசி ஓவரில் நடந்த த்ரில்: ஒரு ஓட்டத்தில் கிண்ணத்தை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

May 22, 2017
in News, Sports
0
கடைசி ஓவரில் நடந்த த்ரில்: ஒரு ஓட்டத்தில் கிண்ணத்தை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

பத்தாவது ஐ.பி.எல் தொடரின் கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று ஹைதராபாத்தி நடைபெற்றது.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 10 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிம்மன்ஸ்(3), பார்த்திவ் பட்டேல்(4) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் ராயுடு 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் ரோகித் சர்மாவும் 24 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் 56 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பொல்லார்டும் 7 ஓட்டங்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா(10), கேவி.சர்மா(1) ஓட்டங்களில் ஆட்டமிழக்க 79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது மும்பை இந்தியன்ஸ்.

இதனால் 100 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இறுதியில் குணால் பாண்டியா இறுதி வரை நின்று விளையாடி 47 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தில் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. புனே அணி தரப்பில் உனந்த்கண்ட், ஜம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் உனந்த்கண்ட் 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணிக்கு துவக்க வீரர்களாக ரகானே, திருப்பதி களமிறங்கினர்.

திருப்பதி இரண்டாவது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணியின் தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

புனே அணியின் எண்ணிக்கையும் சீரான வேகத்தில் எகிறியது. சிறப்பாக ஆடிவந்த ரகானே அணியின் எண்ணிக்கை 71 ஓட்டங்களை எட்டிய போது 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து வந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டோனி-ஸ்மித்துடன் இணைந்து ஆமைவேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் புனே அணி 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் புனே அணிக்கு கடைசி 5 ஓவரில் 47 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

நிதானமாக ஆட வேண்டும் என்று நினைத்து ஆடிய டோனி எதிர்பாரதவிதமாக 10 ஓட்டங்கள் எடுத்த போது பும்ரா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் தனி ஒரு ஆளாக போரடிய ஸ்மித் தன்னால் முடிந்த அளவிற்கு இடைவெளியில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் அடித்து வந்தார்.

இறுதியில் புனே அணிக்கு கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஜான்சன் வீச, முதல் பந்தை எதிர்கொண்ட திவாரி பவுண்டரி அடித்து புனே ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 5 பந்தில் 7 ஓட்டங்கள் என்ற போது, இரண்டாவது பந்தில் திவாரி அவுட் ஆகி பெளலியன் திரும்பினார்.

மூன்றாவது பந்தில் ஸ்மித்தும் அவுட்டாக மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது.

கடைசி இரண்டு பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் புனே அணியால் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் புனே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்கள் எடுத்து 1-ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி அடைந்ததுடன், மூன்றாவது முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

Previous Post

சமந்தாவின் திருமண தேதி உறுதியானது – தேதி இதோ

Next Post

மொத்த துடுப்பாட்ட வீரர்கள் கைவிட்டாலும்: மும்பை அணியை மீட்ட பாண்ட்யா

Next Post
மொத்த துடுப்பாட்ட வீரர்கள் கைவிட்டாலும்: மும்பை அணியை மீட்ட பாண்ட்யா

மொத்த துடுப்பாட்ட வீரர்கள் கைவிட்டாலும்: மும்பை அணியை மீட்ட பாண்ட்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures