Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

September 8, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

‘ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பான’ தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக உள்ளக ஒழுங்முறை தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

அதேவேளை, முன்னாள் டெஸ்ட் வீரர்களான இமாம் உல் ஹக், மொஹம்மத் ரிஸ்வான் ஆகியோர் தொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘ஒழுக்கம் மற்றும் நடத்தை’ தொடர்பான விஷயங்களை உள்ளக ரீதியாக மீளாய்வு செய்து வருவதாகவும், இந்த செயல்முறை உரிய விதிகளின் கீழ் நடத்தப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஊடகப் பணிப்பாளர் அமீர் மிர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய விஷயங்களை அதன் நிலையான நடைமுறைகளின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கையாள்கிறது. இந்த செயல்முறை சபையின் விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும்  முறையான பரிசீலனை செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

லண்டனில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்தபோது அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, இமாம் மற்றும் ரிஸ்வானின் கையடக்க தொலைபேசிகளிலிருந்து தரவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் இங்கிலாந்திடம் 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், இந்த இரண்டு  வீரர்களின் தொலைபேசிகள் அணியின் பாதுகாப்பு அதிகாரியால் கையகப்படுத்தப்பட்டு, அவற்றின் தரவுகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணி நேரத்துக்குப் பின்னர் திரும்பக் கொடுக்கப்பட்டன.

தொலைபேசிகளை கையகப்படுத்தியதையோ அல்லது அவற்றின் தரவுகளைப் பெறப்பட்டதையோ பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தவில்லை.

இந் நிலையில், சரிபார்க்கப்படாத அறிக்கைகளை உறுதிப்படுத்தப்பட்ட உண்மையானதாக கருத வேண்டாம் என திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடக பணிப்பளாளர் எச்சரித்தார்.

உள்ளக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறி, கூடுதல் விவரங்களை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுத்துவிட்டது.

இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டெஸ்ட் அணி இரு பெரும் தோல்விகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, எட்ஜ்பாஸ்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்டுக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்று தொடரை தனதாக்கிக்கொண்டுள்ளது.

ஹெடிங்லேயில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களாலும் லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 194 ஓட்டங்களாலும் பாகிஸ்தானை இங்கிலாந்து இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இமாம் மற்றும் ரிஸ்வான் உட்பட ஏழு வீரர்களை டெஸ்ட் அணியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விடுவித்ததுடன், சிவப்பு பந்து கிரிக்கெட்டின் முதன்மை பயிற்றுநரான சர்ஃபராஸ் அகமதுவிற்குப் பதிலாக மைக்கல் ஹெசனை இடைக்காலப் பயிற்றுநராக நியமித்தது.

Previous Post

கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

September 8, 2026
கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

September 8, 2026

24 புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17, 18இல் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு!

September 8, 2026
நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன் – முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன் – முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

September 8, 2026

Recent News

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

September 8, 2026
கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

September 8, 2026

24 புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17, 18இல் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு!

September 8, 2026
நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன் – முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன் – முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

September 8, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures