Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனைத்துமே மிதந்து பிரிந்து போகும்..!! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் – அண்ட வெடிப்பில் மாற்றம்..!!!

December 17, 2016
in News
0
அனைத்துமே மிதந்து பிரிந்து போகும்..!! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் – அண்ட வெடிப்பில் மாற்றம்..!!!

அனைத்துமே மிதந்து பிரிந்து போகும்..!! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் – அண்ட வெடிப்பில் மாற்றம்..!!!

அண்டம் பிரபஞ்சம் என்றாலே விந்தையான ஒன்று. இது தொடர்பிலான தேடல்கள் மட்டும் எப்போதும் குறைவடைவதே இல்லை.

இத்தகைய பிரபஞ்சம் தொடர்பிலான புது ஆய்வு முடிவுகளின் படி ஈர்ப்பு விசை குறைவடைந்து சென்று அனைத்தும் மிதக்கத் தொடங்கி பின்னர் விரிவடைந்து சென்று விடும் என்று கண்டு பிடித்துள்ளார்கள்.

ஒரு வெடிப்பு நிகழும் போது அந்த வெடிப்பில் இருந்து சிதறும் பொருட்கள் வேகமாக அனைத்து பக்கங்களும் பரவி சென்று சிதறி விழுவது என்பது வெடிப்பின் போது நிகழும் ஒன்று. இப்படி சிதறி விழுவதற்கு ஈர்ப்புவிசையே காரணமாக அமைகின்றது.

அதே சமயம் ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் (அண்டத்தில்) இவ்வாறான வெடிப்பு ஏற்படுமாயின் வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் கீழே விழாது அதே சமயம் ஓர் இடத்தில் நிற்காது.

அதன் படி இடையில் குறுக்கீடு ஏற்படாவிட்டால் ஏதாவது ஒரு சக்தி (ஆற்றல், உதிர் வினை) மூலம் தடுக்கப்படாவிட்டால் வெடித்த சிதறல்கள் தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் இங்கு அதன் வேகத்திலும் தடை இருக்காது மாற்றமும் இருக்காது.

அண்டத்தின் பிரமிக்கத்தக்க ஆற்றல் இது. பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் தத்தமது நிறைக்கு ஏற்ப ஈர்ப்புவிசையினை கொண்டுள்ளது.

சூரியன் உருவாகிய போது ஏற்பட்ட அதிபயங்கர வெடிப்பில் உண்டான புகை தூசு மற்றும் துணிக்கைகள் போன்றன சிதறப்பட்டு ஈர்ப்பு விதிக்கு கட்டுப்பட்டு சூரியனை இடைவிடாது சுற்ற, அவை தத்தமது நிறைக்கு ஏற்ப ஈர்ப்பு விசையால் இணைந்ததன் மூலமாகவே எமது சூரிய குடும்பத்தில் பூமி உட்பட மற்ற கோள்களும் உருவாகியதாக விஞ்ஞானிகளின் கருத்து உள்ளது.

அதேபோல் பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்த அண்ட மா வெடிப்பிற்கு (டிபைடீயபெ) பிறகு விரிவடைந்த பொருட்களே இப்போது பிரபஞ்சத்தில் நிறைந்துள்ளது. பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் எல்லை எவராலும் கணக்கிட முடியவில்லை.

என்றாலும் சுமார் 1300கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மா வெடிப்பு அதன் ஆரம்ப வெடிப்பின் வேகம் குறைவடையும் எனவும் அவ்வாறு குறைவடைந்தபோது ஆரம்ப புள்ளியை நோக்கி மறுபடியும் ஈர்த்துக் கொண்டு சுருக்கமடையும் எனவும் விஞ்ஞானிகள் எதிர்ப்பார்த்தனர்.

அதாவது பிரபஞ்ச வெளியில் இருக்கும் நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலங்கள் மற்றும் பிரபஞ்சத்தில் பரந்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் விசையினால் மீண்டும் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு சுருங்கிய பின்னர் ஆரம்ப புள்ளியின் நிலைக்கே வந்துவிடும் என்பதே விஞ்ஞானிகள் எதிர்பார்த்த விடயம்.

இதற்கு பெரும் அண்டக்குழைவு big crunch என்று பெயரிடப்பட்டது. நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லுநர்கள் முன்வைக்கும் கருதுகோள்களில் ஒன்றே இது.

இதன்படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டுமொத்தமாய் சுருங்கி ஒரு கருந்துளையாகி விடும் என்பதே விஞ்ஞானிகளின் வாதம்.

இந்த கொள்கையின் படி அண்ட மாவெடிப்பு ஏற்பட்டு சுமார் 1300 கோடி ஆண்டுகள் முடிந்து விட்டதால் அண்டத்தின் விரிவாக்க வேகம் குறைந்து ஈர்ப்பு விசையினால் இந்த சுருக்கம் ஆரம்பித்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

என்றாலும் அதிநவீன தொலைநோக்கியில் பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறையவில்லை என்றும், பிரபஞ்சம் முன்னரை விடவும் வேகமாக விரிவடைவதை இப்போது கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஆச்சிரியத்தில் இருக்கின்றனர்.

இதில் பிரமிப்பான செய்தி என்னவெனில் இந்த வேகத்தில் அனைத்தும் (பிரபஞ்சம்) விலகி விரிவடைந்து செல்லுமானால் ஆரம்ப ஈர்ப்பு விசை குறைவடைந்து விடும். பூமியின் ஈர்ப்பு விசையிலும் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.

இப்படியாக குறைவடையும் ஈர்ப்பு விசையின் அதன் விளைவு மிகவும் வித்தியாசமாக நம் கண் எதிரே விண்வெளியை தோற்றுவிக்கும். அதாவது நம்மைச் சுற்றி உள்ள பொருட்கள் எல்லாம் பூமியிலிருந்து மேல் எழுந்து ஆரம்பத்தில் மிதக்கத் தொடங்கும்.

இதன் படி எல்லாப் பொருட்களும் படிப்படியாக அணு அணுவாகப் பிரிந்து வெளியில் விலகிச் சென்றுவிடும், உயிரினங்களும் உட்பட அனைத்துமே. காரணம் ஈர்ப்புவிசை தான் இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றன.

சுருங்கக் கூறின் சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்தும் கிரகங்களும் சூரியனை விட்டுப் பிரிந்து சென்றுவிடும். விரிவடையும் வேகம் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் பிரபஞ்சம் அழியும் என்ற கோட்பாட்டை பல இப்போது விஞ்ஞானிகள் அழுத்திக் கூறுகிறார்கள்.

என்றாலும் சில இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்கள் ஈர்ப்பு விசையினால் சுருங்கும் பிரபஞ்சம் மிகச் சிறியதாக சுருங்கிவிட்டால் ஈர்ப்புவிசையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி பிரபஞ்சத்தை விரிவாக்கும் என்று கூறுவதோடு big bounce என்று பெயர் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் படி விரிவும் சுருக்கமும் மாறி மாறி நடைபெறும் நிகழ்ச்சியால்தான் எமது பிரபஞ்சம் இந்த நிலையில் இருக்கின்றது. மேலும் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் அண்ட மா வெடிப்பின் மூலம் பிரபஞ்சம் தோன்றவில்லை.

அதற்கு முன்னரே உருவாகி இருந்த பிரபஞ்சம் சுருங்கி விரிவடைந்த காரணத்தினால் தான் பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றது. ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து பிரபஞ்சம் உருவாகவில்லை என்ற ஆச்சரிய முடிவையும் ஒரு சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரபஞ்சத்தின் உள்ள கருந்துளைகள் மூலமாக புதிய பிரபஞ்சங்கள் உருவாகியிருக்கின்றது எனவும் சில விஞ்ஞானிகள் வாதம் முன்வைத்துள்ளனர்.

இது எப்படியாயினும் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் முடிவு பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் முன்னுக்கு பின் முரண்பட்ட கோட்பாடுகளையே வைத்து வருகின்றனர்.

இத்தனையை கூறும் எவரும் பிரபஞ்சத்தின் எல்லை எது? கருமை மிக்க பகுதிகளில் காணப்படும் ஆற்றல் எது? அதனைப் படைத்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடையை மட்டும் கூற முன்வரவில்லை.

அதற்கு தானே ஆண்டவன் என்ற ஓர் பதிலை வைத்து விட்டான். பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்காலத்தில் இவற்றிக்கு பதில் கிடைக்கும் அனைத்தும் விரிவடைந்து மிதக்குமா விடையை தேடிக்கொண்டே இருப்போம்.

Tags: Featured
Previous Post

இறுதி செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்துகிறார் பான் கீ மூன்

Next Post

அவசர நேர பயணத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூஜ்ய தன்மை கொண்ட தெளிவற்ற பார்வை நிலை?

Next Post
அவசர நேர பயணத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூஜ்ய தன்மை கொண்ட தெளிவற்ற பார்வை நிலை?

அவசர நேர பயணத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூஜ்ய தன்மை கொண்ட தெளிவற்ற பார்வை நிலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேண வேண்டும் | ரவிகரன்

June 4, 2026
யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

June 4, 2026
ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

June 3, 2026

Recent News

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேண வேண்டும் | ரவிகரன்

June 4, 2026
யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

June 4, 2026
ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

June 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures