இறுதி செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்துகிறார் பான் கீ மூன்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று தனது இறுதி செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். இந்தத் தகவலை பான் கீ மூன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவி காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. எனவே, அவர் தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக டிசம்பர் 31 ஆம் திகதி வெளியேறுகின்றார்.
இந்த நிலையில், இன்று தனது இறுதி செய்தியாளர் சந்திப்பில் பான் கீ மூன் பங்கேற்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளராக போரத்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அண்டோனியோ கட்டேரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 12 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.