தமிழ்நாட்டு சட்டமன்ற தலைவராக நாளை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காலை 11.30 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக வெற்றி கழக வட்டாரங்ளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், பதவியேற்பு விழாவை நடத்துமாறு ஆளுநரிடம் விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இந்திய காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டின் ஆளுநர்
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளாார்.

இதன்படி விஜய் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்நாட்டின் ஆளுநரை சந்தித்துள்ளார்.
முன்னதாக தனது கட்சி பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியதோடு, பெரும்பான்மையை நிரூபிப்பதில் நம்பிக்கையையும் ஆளுநரிடம் வெளிப்படுத்தியிருந்தார்.
விஜய் வென்ற இரண்டு இடங்களையும் சேர்த்து, 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் திவ்க 108 இடங்களைப் பெற்றிருந்தது.
தற்போது காங்கிரஸ் கட்சியும் விஜய்கான ஆதரவை வெளியிட்டுள்ளது. மேலும் ஆட்சியமைக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 118 ஆசணங்கள் என்ற பெறும்பான்மையை விஜய் பெற்றிருக்க கூடும் எனவும், கூட்டிணைந்த அந்த தரப்புக்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
