Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

March 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நாட்டின் மின்சக்தி துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி மற்றும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 847 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை  புதன்கிழமை (18)  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் வலுசக்தி துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. தடையற்ற மின் விநியோகம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. இலங்கையின் மின் சக்தி கட்டமைப்பின் இதயம் போன்றிருப்பது நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையமாகும். இரவில் மின்சாரத்துக்கான அதிக கேள்வி நிலவும் போது, நுரைச்சோலை மின் நிலையத்திலிருந்தே மின்னுற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டுக்கு தேவையான விலைமுறி 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு 1.2 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். இந்த நிறுவனமொன்றே மிகக் குறைந்த விலையை முன்வைத்து இந்த விலைமுறியைப் பெற்றுக் கொண்டது. குறைந்த விலையை இந்த நிறுவனம் அறிவித்த போதிலும், எமக்கு வழங்கியுள்ள அனைத்து ஒட்டுமொத்த நிலக்கரி தொகையும் தரம் குறைவானதாகும்.

இது தொடர்பில் பாராளுமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் தெரிவுக்குழுவின் கண்காணிப்பிற்கமைய இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த விசாரணை அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கிடையில் 9 நிலக்கரி கப்பல்கள் வருகை தந்துள்ளன.

இந்த 9 கப்பல்களாலும் 847 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அரிசி இறக்குமதியில் ஏற்பட்ட பிரச்சினைகளால் கருப்பு பட்டியலில் இடப்பட்ட நிறுவனத்துக்கே இந்த அரசாங்கம் மீண்டும் நிலக்கரி இறக்குமதிக்காக விலைமுறியை வழங்கியிருக்கிறது.

தரம் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதோடு மாத்திரமின்றி, எந்தவொரு கப்பலும் உரிய தினத்தில் வந்தடையவுமில்லை. ஆனால் அரசாங்கம் இதுவரையில் இந்த விலைமுறியை இரத்து செய்யவில்லை.

குறித்த நிறுவனத்தின் மீது வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு காணப்படும் தொடர்புகளே இதற்கான காரணமாகும். தரம் குறைவானாலும், கால தாமதமானாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் அந்த நிறுவனத்துக்கே இதனை வழங்குவோம் என்ற நிலைப்பாட்டிலேயே முழு அரசாங்கமும் இருக்கிறது.

ஆனால் ஊடகங்கள் இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, தன்னால் அதற்கு பொறுப்பு கூற முடியாது என்றும், இலங்கை நிலக்கரி நிறுவனத்திடமே அது குறித்து கேட்க வேண்டும் என்றும் வலுசக்தி அமைச்சர் குறிப்பிடுகின்றார். நிலக்கரி நிறுவனம் வலுசக்தி அமைச்சின் கீழுள்ள முற்று முழுதான அரச நிறுவனம் என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு அமைச்சர் எவ்வாறு அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கத்துவம் வகிக்க முடியும்?

கடந்த ஆட்சியில் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களால் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அவர் பதவி நீக்கப்பட்டார். அவ்வாறிருக்கையில் தற்போதைய ஜனாதிபதியால் ஏன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாது? ஜனாதிபதியிடமிருந்து இதற்கான பதிலை எதிர்பார்க்க முடியாது என்பதால், எதிர்வரும் 18ஆம் திகதி எதிர்க்கட்சிகளால் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளோம்.

இது குறித்து ஏனைய கட்சிகளுடனும் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடவுள்ளது. செவ்வாய்கிழமை (17) அதில் கையெழுத்திட்டு புதனன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். நிலக்கரி மாத்திரமின்றி, எரிபொருள் விடயத்திலும் குமார ஜயக்கொடியின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. அவர் இந்த பதவியை வகிப்பதற்கு சற்றும் தகுதியற்றவாராவார். எனவே அவர் பதவி நீக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.

Previous Post

எரிபொருள் ‘கியூ.ஆர்’ முறைமை மீண்டும் அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்!

Next Post

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து வருகின்றது ; சஜித் பிரேமதாச

Next Post
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து வருகின்றது ; சஜித் பிரேமதாச

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures