Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் : வெளியான அறிவிப்பு

February 27, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணிபுரியும் கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால் இந்த திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகாலமாக அதனுடன் தொடர்புடைய கடற்றொழிலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த விசேட திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

கடற்றொழில் சார்ந்த மூழ்கும் நடவடிக்கை

அதன்படி, கடற்றொழில் சார்ந்த மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது மரணம் சம்பவித்தால், காப்பீடு செய்தவருக்கு 12 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் : வெளியான அறிவிப்பு | New Insurance Scheme For Fishermen 12 Lakh Rupees

கடல் அல்லது நன்னீர் நிலைகளில் மூழ்கிப் பணியாற்றும் போது ஏற்படும் விபத்துக்களால் தற்காலிகமாகச் செயலிழப்பவர்கள் அல்லது அங்கவீனமடைபவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

ஒரு வருடத்திற்கான இந்த காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள கடற்றொழிலாளர் ஒருவர் வருடாந்தம் 1,920 ரூபாய் மாத்திரமே செலுத்த வேண்டும்.

பாதுகாப்புத் தேவையைப் பொறுத்து 12 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபாய் வரையான காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Previous Post

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

Next Post
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures