Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

February 22, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறைக்கு இந்த வருடம் முழுவதும் பிக்ஸ்டன் எல்ஈடி பிறைவேட் லிமிட்டட் பூரண அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டில் முன்னணி பாடசாலையாகவும் ‘கால்பந்தாட்ட மன்னர்கள்’ என அழைக்கப்படுவதுமான ஸாஹிரா கல்லூரி, இந்த வருடம் விளையாடவுள்ள கால்பந்தாட்டப் போட்டிகளின்போது பிக்ஸ்டன் ஜேர்ஸிகளை அணிந்து விளையாடவுள்ளன.

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்யும் சகல போட்டிகளிலும் விளையாடும் ஸாஹிரா அணியினரை பிக்ஸ்டன் லைட்டிங் பிரகாசிக்கச் செய்யவுள்ளது.

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கான தாராள அனுசரணை உதவுத் தொகையை பிக்ஸ்டன் எல்ஈடி பிறைவேட் லிமிட்டெட் சார்பாக அதன் அதிபர் அப்துல் ரஹ்மான் ஸுபைரிடம் இருந்து கல்லூரி அதிபர் ட்ரிஸ்வி மரிக்கார் பெற்றுக்கொண்டார். அத்துடன் கல்லூரி அணிகளுக்கான ஜேர்சி செட்களையும் அப்துல் ரஹ்மான் ஸுபைர் வழங்கிவைத்தார்.

தமது அனுசரணை ஸாஹிரா கால்பந்தாட்டத்துடன் மட்டுமல்லாமல் சமூகங்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்கத்தையும் கொண்டது என பிக்ஸ்டன் எல்ஈடி பிறைவேட் லிமிட்டட் அதிபர் அப்துல் ரஹ்மான் ஸுபைர் குறிப்பிட்டார்.

‘இத்தகைய அனுசரணை ஒன்றை எமது நிறுவனம் வழங்குவது இதுவே முதல் தடவையாகும். இந்த அனுசரணை ஸாஹிரா கால்பந்தாட்டத்தை ஊக்குவித்து மேம்படுத்தும் என நம்புகிறோம். இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கால்பந்தாட்டம் பிரபல்யம் பெற்ற விளையாட்டாகும். இந்த விளையாட்டுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

‘கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் அதேவேளை இன்னும் ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே இந்த அனுசரணையை வழங்க முன்வந்துள்ளோம். இன்னோரென்ன பிரச்சினைகள் காராணமாக இலங்கை மக்கள் உட்பட உலக மக்கள் நலிவடைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் மிகவும் அவசியமாகும். எனவே மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த கால்பந்தாட்ட விளையாட்டை ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

‘ஸாஹிராவுக்கு முதல் தடவையாக வழங்கும் இந்த அனுசரணை கனி தரும் என நம்புகிறோம். அந்த நம்பிக்கை எமது அனுசரணையைத் தொடர்வதற்கு நிச்சயமாக உதவும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் ட்ரிஸ்வி மரிக்கார், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டத்தின் ‘தந்தை’ என வர்ணிக்கப்படும் எம்.இஸட். பாறூக், முன்னாள் தேசிய வீரரும் சம்பியன் வீரருமான நெய்னா மொஹமத், கால்பந்தாட்ட வளர்ச்சிக்காக அயராது உழைப்பவரும் சம்பியன் அணிகளை உருவாக்கியவருமான பி.எஸ்.ஏ. ரபீக், பயிற்றுநர்களான முன்னாள் தேசிய விரர்கள் ஆகியோர் ஸாஹிரா கால்பந்தாட்ட விளையாட்டில் முக்கிய பங்காற்றி வருவதால் இன்னும் பல வருடங்களுக்கு தனது அனுசரணையை தொடர பிக்ஸ்டன் நிறுவனம் முன்வரும் என்பது நிச்சயம்.

கால்பந்தாட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஸாஹிரா கல்லூரியில் 5 வயது பிரிவுகளில் கால்பந்தாட்ட அணிகள் இருப்பதுடன் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஒன்றும் இயங்கிவருகிறது.

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம், கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு   ஆகியவற்றினால் நடத்தப்படும் எல்லா வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலும் ஸாஹிரா சம்பியனாகியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

அத்துடன் ஸாஹிராவிலிருந்தே அதிகளவிலான வீரர்கள் தேசிய அணிகளில் இடம்பெற்றனர், இடம்பெற்றுவருகின்றனர்.

கல்லூரியின் கபூர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த அனுசரணை வழங்கும் வைபவத்தில் கல்லூரியின் கால்பந்தாட்ட வீரர்களும்   பயிற்றுநர்களும் கலந்துகொண்டனர்.

Previous Post

தேசத்திற்கும் தேசியத்திற்கும் துரோகம் இழைக்காதீர்கள் | ஊடகப் போராளி கிருபா பிள்ளை

Next Post

மன்னாரில் இருவர் சுட்டுக் கொலை | சந்தேக நபர்கள் இருவர் கைது

Next Post
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

மன்னாரில் இருவர் சுட்டுக் கொலை | சந்தேக நபர்கள் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures