Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த 5 வருடங்களுக்கு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் | சமன் ரத்னப்பிரிய

January 17, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அடுத்த 5 வருடங்களுக்கு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் | சமன் ரத்னப்பிரிய

நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று சவால்களை வெற்றிக்கொண்டுள்ளார். எனவே இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வரலாற்று சிறப்புமிக்க மக்களாணையினை வழங்கி அடுத்த 5 வருடங்களுக்கு இந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தங்காலை நகர மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2024 தேர்தல் ஆண்டாகும். முதலில் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே இடம்பெறவுள்ளது. அந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் தேசிய வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெறச் செய்து இந்த நாட்டின் தலைவராக்கும் பொறுப்பு எமக்குள்ளது என்பதை நான் நினைவூட்டுகிறேன்.

இன்று இந்த நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாவிட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா இந்த நாடுகளின் நன்மதிப்பைப் பெறாவிட்டால் வீழ்ந்த நாட்டை உயர்த்த முடியாது.

அதனால்தான் அவர் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் மிகவும் கடினமானதொரு பாராளுமன்றத்துடன் செயற்பட்டு வருகின்றார். தனி ஒரு எம்.பி.யாக வந்தவர். தனக்கு சாதகமற்ற பாராளுமன்றம் இருக்கும் நிலையிலேயே அவர் அரச தலைவராக செயல்படுகிறார். நாடு முழுவதும் செல்லாமல் இந்த அரசியலை நிர்வகிக்க முடியாது.

கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் பொறுப்பை ஏற்றார். லிபியாவின் பொருளாதாரம் சரிந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் போராடினார். உலகில் ஒவ்வொரு நாடும் வீழ்ந்த போது எதிர்க்கட்சித் தலைவர் முன் வந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர். எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டைப்பொறுப்பேற்றாரா? இப்போது அடுத்த நான்தான் தலைவர் நான் தான். தான் இந்த நாட்டைப் பொறுப்பேற்கத் தகுதியானவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் அந்த சவாலை ஏற்க முடியாது என்றால் அவர் நாட்டின் தலைவராக இருக்க தகுதியற்றவர். மேலும் இன்று தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல்வேறு நபர்கள் உள்ளனர்.

ரணிலுடன் மோதுவதற்கு இந்த நாட்டில் மாற்றுத் தலைவர் இல்லை. நாட்டின் துரதிஷ்டவசமாக இந்த நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரத்தையோ பலத்தையோ கொடுக்கவில்லை. அவர் எப்போதும் இரண்டாவதாக இருந்தார்.

இந்த நாடு வீழ்ந்த போது கொண்டு வந்து ஜனாதிபதி கதிரையில் அமர வைத்தார்கள். இப்போது அவர் நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல உழைத்து வருகிறார். அப்படியானால் அடுத்த 5 வருடங்களுக்கு இந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும்.

எனவே 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் நாட்டை வெற்றிகொள்ளும் ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கும் பொறுப்பு அம்பாந்தோட்டை மக்களுக்கு உள்ளது. இது தவிர்க்க முடியாத பொறுப்பு அந்த பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Previous Post

வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு | நோயாளர்கள் பெரும் அவதி

Next Post

தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

Next Post
தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாமலுக்கு அஞ்சுகிறார் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டன்

July 15, 2026
கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாமலுக்கு அஞ்சுகிறார் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டன்

July 15, 2026
கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures