Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் | திஸ்ஸ குட்டியராச்சி

January 14, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் | திஸ்ஸ குட்டியராச்சி

பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உள்ளது,இருப்பினும் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் உள்ளோம்.ஆனால் பொருளாதார பாதிப்பினால் மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் மக்கள் எவ்வாறு அரசியல் தீர்மானத்தை எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உண்டு.

வரலாற்று காலங்களில் அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் எடுத்த தீர்மானங்களை கொண்டு இந்த அச்சம் தோற்றம் பெற்றுள்ளது.

தேசிய விவசாயத்துறையை மேம்படுத்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மூடிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

மூடிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜயவர்தனா தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்.

ஜே.ஆர்.ஜயவர்தன மூடிய பொருளாதாரத்தை இரத்து செய்து திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார்.நாட்டு மக்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள்.

ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் துறைமுகத்துக்கு சென்றது தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.பொருளாதார பாதிப்பு என்பதால் அழுது கொண்டிருக்க முடியாது.

மகிழ்வுடன் இருக்க வேண்டும்.துறைமுகதத்துக்கு சென்றதால் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்றார்.

Previous Post

உலக நாயகன் கமல் ஹாசனை இயக்கும் சண்டை பயிற்சி இயக்குநர்கள்

Next Post

சுவிற்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்துகொண்டு உகண்டாவுக்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி

Next Post
ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

சுவிற்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்துகொண்டு உகண்டாவுக்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures