Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்வெட்டை தவிர்க்குமாறு பணிப்புரை | அமைச்சர் கஞ்சன விஜேசேகர

December 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது…

பண்டிகைக்கால விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பாக சர்வதேச வழிகாட்டுதலின்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற பராமரிப்பு பணிகளால் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

செக்குடியரசில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

Next Post

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்!

Next Post
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures