Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எவராலும் நாட்டை ஒரு வாரம் கூட ஆட்சி செய்ய முடியாது | பந்துல

November 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை துரதிஸ்டவசமாக தோல்வியடைந்து, கடன் மறுசீரமைப்பும் தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது.

இதுதான் உண்மை. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பணிகள் வெற்றிப்பெற்றால் தான் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை இனி முன்னெடுக்க முடியும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வேளையின் போது பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

100,000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ்13,160 வீதிகளின் (10848 கிலோ மீற்றர்) அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கருத்திட்டத்தின் கீழ் இதுவரை 5201 வீதிகளின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் 7959 வீதிகளின் பணிகளிள் அபிவிருத்தி பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒப்பந்தகாரர்களுக்கு இதுவரை 168.3 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது,5 பில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளது.

பொருளாதார மீட்சிக்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் வெற்றிப்பெற்றால் தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 48 மாத கால கடன் ஒத்துழைப்பை வழங்குவதை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை துரதிஸ்டவசமாக தோல்வியடைந்து, கடன் மறுசீரமைப்பும் தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது. இதுதான் உண்மை. ஆகவே நாட்டு மக்களுக்கு அரசியல் தரப்பினர் உண்மையை குறிப்பிட வேண்டும் என்றார்.

Previous Post

இளைய சகோதரனை கொலை செய்ய கப்பம் | மூத்த சகோதரனும் தந்தையும் கைது!

Next Post

காசாவிலிருந்து வெளியேற முயன்ற பாலஸ்தீன கவிஞர் இஸ்ரேலிய படையினரால் கைது

Next Post
காசாவிலிருந்து வெளியேற முயன்ற பாலஸ்தீன கவிஞர் இஸ்ரேலிய படையினரால் கைது

காசாவிலிருந்து வெளியேற முயன்ற பாலஸ்தீன கவிஞர் இஸ்ரேலிய படையினரால் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures