Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலுவைத் தொகை செலுத்தியும் மன்னார் பாடசாலையொன்றின் மின் இணைப்பை மீள வழங்காத வவுனியா மின்சார சபையின் அசமந்தப் போக்கு!

September 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிலுவைத் தொகை செலுத்தியும் மன்னார் பாடசாலையொன்றின் மின் இணைப்பை மீள வழங்காத வவுனியா மின்சார சபையின் அசமந்தப் போக்கு!

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மன்.சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில், முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்களாகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் மின் கட்டணம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் காணப்பட்ட நிலையில், அதனை செலுத்தாத காரணத்தினால் மடு மற்றும் வவுனியா மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் மின்சார சபை அதிகாரிகள் வருகை தந்து பாடசாலைக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் பணம் சேகரிக்கப்பட்டு பாடசாலைக்கான மின் பட்டியலில் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டது.

நிலுவைத் தொகை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை.

இதனால் பாடசாலையில் காணப்படும் திறன் பலகைகள் செயலற்று இருப்பதோடு, நிகழ்நிலை ஊடாக செயற்படுத்தும் விடயங்கள் பூர்த்தியற்ற நிலையில் காணப்படுவதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக, வவுனியா மின்சார சபையுடன் பாடசாலையின் அதிபர் தொடர்பை ஏற்படுத்தியபோது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்குகின்றோம் எனக் கூறியபோதும் இதுவரை இணைப்பை வழங்காமல் வவுனியா மின்சார சபை அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பாடசாலை நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Previous Post

நாட்டிற்கு ஒரு நவீன அரசியல் அமைப்பு தேவை – நாமல்

Next Post

கண்டங்களுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவூதி கைச்சாத்து

Next Post
கண்டங்களுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவூதி கைச்சாத்து

கண்டங்களுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவூதி கைச்சாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures