Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது

December 1, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது

Saudi Arabia's midfielder #10 Salem Al-Dawsari (L) kicks the ball as Mexico's midfielder #24 Luis Chavez (R) reacts during the Qatar 2022 World Cup Group C football match between Saudi Arabia and Mexico at the Lusail Stadium in Lusail, north of Doha on November 30, 2022. (Photo by PATRICIA DE MELO MOREIRA / AFP)

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் சி குழுவுக்கான தனது கடைசி லீக் போட்டியில் சவூதி அரேபியாவை 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் மெக்சிகோ வென்ற போதிலும் அவ்வணிக்கு 2ஆம் சுற்றில் விளையாடும் வாய்ப்பு அற்றுப்போனது.

போலந்தும் மெக்சிகோவும் சம புள்ளிகளைப் பெற்ற போதிலும் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் மெக்சிகோவுக்கு உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற நேரிட்டது.

போலந்தை 2 – 0 என ஆர்ஜன்டீனா வெற்றிகொண்ட அதேவேளை, லுசெய்ல் விளையாட்டரங்கில் சவூதி அரேபியாவுடனான போட்டியில் மெக்சிகோவும் அதே கோல் எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தது. இதனால் 2ஆம் சுற்றுக்கு செல்ல மெக்சிகோவுக்கு மேலும் ஒரு கோல் தேவைப்பட்டதுடன் போட்டியில் உபாதையீடு நேரத்தில் 3 நிமிடங்களே எஞ்சியிருந்தது.

ஆனால், உபாதையீடு நேரத்தில் (90+5 நிமிடம்) சவூதி அரேபியா கோல் ஒன்றைப் போட்டதால் மெக்சிகோவின் இறுதிச் சுற்று வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்டது.

அப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடப்படாதபோதிலும் இரண்டு அணிகளும் சில வாய்ப்புகளைத் தவறவிட்டன.

சவூதி அரேபியாவை விட மெக்சிகோ கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

போட்டி ஆரம்பித்து 3ஆவது நிமிடத்திலும் முதலாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியிலும் 3 கோல் போடும் வாய்ப்புகளை மெக்சிகோ தவறவிட்டது.

அதேவேளை, சவூதி அரேபியாவும் 2 வாய்ப்புகளைக் கோட்டை விட்டது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2ஆம் சுற்றுக்குள் நுழையக்கூடியதாக இருக்கும் என போட்டிக்கு முன்னர் இரண்டு அணிகளும் அறிந்திருந்ததால் வெற்றிக்காக இரண்டு அணிகளும் கடுமையாக போராடின.

இடைவேளைக்குப் பின்னர் போட்டியின் 47ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி மெக்சிகோ சார்பாக ஹென்றி மார்ட்டின் முதலாவது கோலைப் போட்டார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து லூயிஸ் சாவெஸ் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் போட்டார்.

30 யார் தூரத்திலிருந்த கிடைக்கப்பெற்ற ப்றீ கிக்கை தடுப்பு சுவருக்கு மேலாக வளைந்து செல்லும் வகையில் சாவெஸ் உதைத்த பந்தை தடுக்க கோல்காப்பாளர் அல் உவைய்ஸ் முயற்சித்தபோதிலும் பந்து அவரைக் கடந்து கொலினுள் புகுந்தது.

அதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை அதிகரிக்க மெக்சிகோ கடுமையாக முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சிகள் சவூதி அரேபியாவில் தடுக்கப்பட்டது.

போட்டியின் 73ஆவது நிமிடத்தில் சாவெஸ் மீண்டும் ஒரு ப்றீ கிக் மூலம் கோல் போட எடுத்த முயற்சியை அல் உவைஸ் தனது கையால் தட்டி தடுத்தார்.

உபாதையீடு நேரத்திற்குள் போட்டிக்கு சென்று 4ஆவது நிமிடத்தைத் தொட்டபோது மற்றைய போட்டியில் ஆர்ஜன்டீனா 2 – 0 என வெற்றிபெற்றிருந்தது.

இதன் காரணமாக மெக்சிகோ 2ஆம் சுற்றுக்கு தகுதிபெற மேலும் ஒரு கோலைப் பெறவேண்டியிருந்தது. ஆனால், 90+5ஆவது நிமிடத்தில் பாஹ்ப்ரியுடன் இரட்டைப் பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்ட சலிம் அல்-தவ்சாரி மிகவும் அலாதியான கோல் ஒன்றைப் போட மெக்சிகோவின் இரண்டாம் சுற்று வாய்ப்பு பறிபோனது.

Previous Post

பேலியகொடையில் ஆணின் சடலம் மீட்பு

Next Post

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

Next Post
சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

September 12, 2026
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

September 12, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026

Recent News

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

September 12, 2026
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

September 12, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures