Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

Chamari Athapaththu, Captain of Sri Lanka and Fatima Sana Khan, Captain of Pakistan during the toss of the 2nd Semi-Final of the DP World Women’s T20 Asia Cup 2026 between Sri Lanka and Pakistan at Dubai International Cricket Stadium, Dubai, United Arab Emirates, on September 11, 2026. Photo by Vipin Pawar / CREIMAS

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (11) இரவு நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண அரை இறுதிப் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட தகுதிபெற்றது.

மத்திய வரிசை விராங்கனைகள் ஹர்ஷித்தா சமரவிக்ரம., கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, கௌஷினி நுதியங்கனா ஆகியோரின் திறமையான துடுப்பாட்ட ஆற்றல்கள் இலங்கையை வெற்றி பெறச் செய்தது.

பாகிஸ்தான் சார்பாக அணித் தலைவி பாத்திமா சானா சகலதுறைகளிலும் பிரகாசித்தபோதிலும் அது இறுதியில் வீண்போனது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 8 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் 7ஆவது ஓவரில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

முன்வரிசையில் இமேஷா துலானி மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

எனினும் மத்திய வரிசையில் ஹர்ஷித்தா சமரவிக்ரம (36), கவிஷா டில்ஹாரி (33) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால் இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர்.

அடுத்து ஜோடி சேர்ந்த நிலக்ஷிகா சில்வா (18 ஆ.இ.), கௌஷினி நுதியங்கனா (10 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் பாத்திமா சானா 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

ஷவ்வால் ஸுல்பிகார் (24), குல் பேரோஸா (21) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

தொடர்ந்து பாத்திமா சானா (47 ஆ.இ.), டூபா ஹசன் (12 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை சிறந்த நிலையில் இட்டனர்.

ஆனால், இலங்கையின் மத்திய வரிசை வீராங்கனைகளின் சாதுரியமான துடுப்பாட்டங்கள் பாகிஸ்தானை தோல்வி அடையச் செய்தது.

தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்

பந்துவீச்சில் சமரி அத்தபத்து 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமுதி ப்ரபோதா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  வீழ்த்தினர்.

ஆட்டநாயகி: பாத்திமா சானா.

Previous Post

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

Next Post

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

Next Post
நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

September 12, 2026
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

September 12, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026

Recent News

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

September 12, 2026
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

September 12, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures