Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது | விமல்

September 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்

எமது அரசியல் பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் வெகுவிரைவில் சிறிய அரசியல் கட்சிகளாகும். மக்கள் பலம் எதனையும் மாற்றியமைக்கும் ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது.

தவறான ஆலோசனைகளுக்கு செவி சாய்த்ததால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று இந்நிலையை எதிர்கொண்டுள்ளார் என மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆசிய பலத்துடன் ஒன்றிணைந்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.மேற்குலகத்தவர்களின் ஆதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிய முடியாது. ஊழலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாவிடினும் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்க முடியும்.முற்போக்கான ஜனநாயக அரசியல் கட்சிகள் அனைவரும் எம்முடன் இணைந்துக்கொள்ளலாம் என அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

மஹரகவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரலாற்று காலம் முதல் நாடு என்ற ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.நாட்டின் பூகோள அமைவிடத்தின் காரணமாகவே இலங்கை பல்வேறு ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் தேசிய வளங்களினால் பல்வேறு ஆக்கிரமிப்புக்களுக் நாடு உள்ளாகியுள்ளது.அனைத்து சவால்களையும் வெற்றிக்கொண்ட வரலாறு காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் நாடு தற்போது மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.உணவு நெருக்கடி,எரிபொருள் நெருக்கடி முழு உலகத்தையும் சவாலுக்குட்படுத்தியுள்ளது.முழு உலகமும் ஏதாவதொரு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தான் இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. அனைத்து சவால்களையும் வெற்றிக்கொண்டு,கௌரவமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவே மேலவை மக்கள் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

பாரம்பரிய சம்பிரதாயங்களில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே தற்போதைய சவால்களை வெற்றிக்கொள்ள முடியும்.முறைமை மாற்றத்தை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்,அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. தவறுகளுக்கு துணைபோவதை தவிர்த்துக்கொள்ளாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.

பிரச்சினைகளை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருக்காமல்,பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே கூட்டணியை அமைத்துள்ளோம்.

எமது பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் சிறிய கட்சிகளாகும். நாட்டு மக்களால் எதுவும் முடியும். ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் நிறைவடைந்து விட்டது.குடும்ப ஆட்சியில்லாதவர்கள் தான் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகளவில் வணிக கடன்களை பெற்ற ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாகியுள்ளார்.

தோற்றம் பெறவுள்ள அனர்த்தங்களை கவனத்திற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையையும்,நாட்டையும் விட்டு வெளியேற நேரிட்டது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை கொண்டு பிற தரப்பினர் தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்,அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆசிய பலத்துடன் ஒன்றிணைந்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். மேற்குலகத்தவர்களின் ஆதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிய முடியாது.

எமது கூட்டணியில் சகலரும் சமமாக மதிக்கப்படுவார்கள். நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து சவால்களை வெற்றிக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்.

தேசிய உற்பத்திகளுக்கும்,பாரம்பரியத்திற்கும் முன்னுரிமை வழங்கி தன்னிச்சையான முறையில் முன்னேற்றமடைய சகல தரப்பினரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.ஊழலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாவிடினும் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்க முடியும் என்றார்.

Previous Post

இந்தியா – பாகிஸ்தான் மோதும் சுப்பர் 4 ஆட்டம்

Next Post

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்  5 விக்கெட்டுகளால் அபார வெற்றி

Next Post
இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்  5 விக்கெட்டுகளால் அபார வெற்றி

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்  5 விக்கெட்டுகளால் அபார வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

June 14, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்

June 14, 2026
இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தி ; யாழில்.இருவேறு இடங்களில் நாளை போராட்டம்

June 14, 2026
கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

June 14, 2026

Recent News

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

June 14, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்

June 14, 2026
இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தி ; யாழில்.இருவேறு இடங்களில் நாளை போராட்டம்

June 14, 2026
கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

June 14, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures