அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை – பலப்பிட்டிய, ஊரவத்த பிரதேசத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் கொலை வழக்கொன்றில் சந்தேகநபர் எனவும் நீதிமன்றுக்க சென்று விட்டு திரும்புகையிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.