Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் சிசு கொலை | வைத்தியர் கைது

July 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசு ஒன்றை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் மேல்மாடி வீதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு பெற்று தங்கியிருந்து கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அம்பாறை மத்தியமுகாமைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரை தனது வீட்டு வேலைக்கு அமர்த்திய நிலையில் 2017 மார்ச் 26 ஆம் திகதி குறித்த வீட்டுப்பணிப்பெண்ணுக்கு ஆண்பிள்ளை ஒன்று பிறந்துள்ளது.

குறித்த சிசு சீலையால் சுற்றி வீட்டின் கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் வேலைக்காரிக்கு தொடர்ந்து இரத்த போக்கு காரணமாக மார்ச் 26 ஆம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மார்ச் 31 ஆம் திகதி தனது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு வைத்தியர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கிணற்றை சோதனையிட்டபோது கிணற்றில் இருந்து சிசு ஒன்றை மீட்டதுடன் வீட்டுப்பணிப்பெண்ணை கைது செய்தனர்.

பின்னர் விசாரணையின் போது குறித்த குழந்தை தனக்கும் வைத்தியருக்கும் பிறந்ததாகவும், வைத்தியர்தான் வீட்டில் மகப்பேற்றை நடாத்தியதாகவும் ,சிசுவை தான் கிணற்றில் வீசியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனவும், குழந்தைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய குழந்தையின் இரத்த மாதிரியும் வைத்தியரின் இரத்தமாதிரியையும் பெற்று அரச பகுப்பாய்வுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த மரபணுபரிசோதனையில் குறித்த வைத்தியரின் இரத்த மாதிரியும் சிசுவின் இரத்த மாதிரியும் ஒன்று எனவும் வைத்தியருக்கு பிறந்த குழந்தை என பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட அறிக்கையை அரச பகுப்பாய்வு திணைக்களம் பொலிஸாருக்கும் நீதிமன்றிற்கும் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து மட்டு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் சந்திரகுமார தலைமையிலான பொலிஸார் தொடர் விசாரணையில் நேற்று திங்கட்கிழமை கண்டி வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் குறித்த வைத்தியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து தனக்கு பிறந்த குழந்தை என மறைத்து குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த விீட்டுப்பணிப்பெண் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், ஏற்கனவே அவருடைய சகோதரியின் கணவருக்கு பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்து வழக்கு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹெய்ட்டியில் படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு

Next Post

கோட்டா தலைமறைவாகவில்லை மீண்டும் வருவார் | அரசாங்கம்

Next Post
கோட்டா தலைமறைவாகவில்லை மீண்டும் வருவார் | அரசாங்கம்

கோட்டா தலைமறைவாகவில்லை மீண்டும் வருவார் | அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures