Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

8 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிராக 7,523 குற்றச் சம்பவங்கள் பதிவு

October 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன. இது குறித்து உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பிலிருந்தும் அவசர கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான தகவல்கள்  கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் அதிகார சபையின் புள்ளி விபரங்களின் படி 2021 ஆம் ஆண்டு நாட்டில்  சிறுவர்களுக்கு எதிராக 11 ஆயிரம் குற்றச்சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளன. 

அதேவேளை 2022 ஆம் ஆண்டு பதிவாகியுள்ள மொத்த துஷ்பிரேயோக வழக்குகளில் 41 வீதமானது சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளாகும்.

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையான துஷ்பிரயோக சம்பவங்களை பார்க்கும் போது இவ்வருடம் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்கள் வரை இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது, சிறுவர் துஷ்பிரயோங்கள் தொடர்பில் அலட்சியப்படுத்தல்கள் தொடர்கின்றன என சுட்டிக்காட்டுகின்றது. 

அதன்படி முதல் எட்டு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிராக 7,523 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு அப்பாற்பட்டு 4,000 முறைப்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருடத்தில் மார்ச் மாதமே அதிக  துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  அந்த மாதம்    1,176 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இக்காலப்பகுதியில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகங்களாக 273 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் சிறுவர்கள் பாலியல் சேஷ்டைகளுக்குட்படுத்திய சம்பவங்கள் 309 ஆக பதிவாகியுள்ளன.

சிறுவர்களை மிக மோசமாக தாக்கிய சம்பவங்கள் 1,481 ஆக பதிவாகியுள்ளன. கட்டாய கல்விக்குட்படுத்திய துஷ்பிரயோகங்கள் 1,206 ஆக உள்ளன.

கொழும்பு மாவட்டத்திலேயே சிறுவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. முதல் எட்டு மாதங்களில் இங்கு 830 சம்பவங்கள் முறைப்பாடுகளாக பதிவாகியுள்ளன. 

இந்த முறைப்பாடுகளில் சிறுவர்கள் மீது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தவர்களில் , ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் இனம் தெரியாதவர்களுடன் பெளத்த பிக்குகளும் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

தென்னிலங்கையில் காணாமல் போனவர்களுக்கு ரத்தொலுவையில் நினைவுகூரல்

Next Post

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures